Friday, November 13, 2015

சாகாக்கல்வி: வாலையின் இருப்பிடம்

சாகாக்கல்வி: வாலையின் இருப்பிடம்: வாலையென்ற மகாரமடா மௌனம் பெண்தான்    வாலையின் இடம் மகாரம் இருகண்ணும் உள் சேரும் இடம். உச்சிக்கு கீழே அன்னாக்குக்கு மேலே , அதுவே ...

சாகாக்கல்வி: கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளி!!

சாகாக்கல்வி: கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளி!!: ஸ்ரீ வில்லி செல்வி பாடினாள் திருப்பாவை! ஆவுடையார் கோயில் கண்ட, கொண்ட அருட்செல்வன் பாடினான் திருவெம்பாவை! வைணவமும் சைவமும் அருட்பெரும்ஜோதி ஒ...

Thursday, November 12, 2015

தமிழ் வலைப்பதிவு பட்டியல் Tamil Blogs List: List of Tamil Blogs

தமிழ் வலைப்பதிவு பட்டியல் Tamil Blogs List: List of Tamil Blogs: http://365paa.wordpress.com/ http://abedheen.wordpress.com/ http://asokarajanandaraj.blogspot.com http://avargal-unmaigal.blogspot.in/ ...

புலவர்களும் படைப்புகளும்


  1. அகத்தியர் -அகத்தியம் 
  2. தொல்காப்பியர்- தொல்காப்பியம் 
  3. கம்பர் - கம்பராமாயணம் 
  4. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம் 
  5. திருவள்ளுவர் - திருக்குறள்
  6. ஒளவையார் - ஆத்திசூடி
  7. வீரமாமுனிவர் - தேம்பாவணி 
  8. மாணிக்கவாசகர் - திருவாசகம்
  9. திருமூலர் - திருமந்திரம்
  10. இராமலிங்க அடிகள் - திருவருட்பா
  11. பாரதியார் - கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, குயில் பாட்டு
  12. உமறுப் புலவர் - சீறாப்புராணம்
  13. திரிகூட ராசப்பகவிராயர் - குற்றாலக் குறவஞ்சி
  14. சுந்தரம் பிள்ளை - மனோன்மணியம்
  15. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  16. சேக்கிழார் - பெரிய புராணம்
  17. கிருட்டிண பிள்ளை - இரட்சண்ய யாத்ரிகம்
  18. அப்பர், சுந்தரர், சம்பந்தர் - தேவாரம்
  19. பாரதிதாசன் -பெற்றோர் இன்பம்
  20. கலியாண சுந்தரனார் - பெண்ணின் பெருமை


Wednesday, November 4, 2015

கருடபுராணம் கூறும் மறுபிறவி ரகசியம் முழுபாகம் A PART OF GARUDA PURANAM

Documentary Hinduism Tamil History

சமாதி அடைய எப்படி (How to Access Superconsciousness Tamil Version Full M...

வேதாத்திரி மகரிஷி - அபூர்வ வீடியோ

Thirumanthiram Explained No 16-தியானம் -1

Thirumanthiram Explained No.1 -உபதேசம்

Pranayama, திருமூலர் அருளிய பிராணாயாமம்

Thirumanthiram Explained No.14-பிராணாயாமம்

Pranayama, திருமூலர் அருளிய பிராணாயாமம்

MEDITATION (தியானம்) | TAMIL | FULL VIDEO

உயிராற்றல் -ஜீவகாந்தம்- தியானம்

Sunday, November 1, 2015

Sumerian is Cangkam Tamil

தமிழர் வரலாற்றை அறியும் முயற்சி

Part-1 Siddhar Phenomenon Color Concept

தென்னாபிரிக்காவிலும் தமிழ்

தமிழ் பழங்குடி கடல் வேடுவர்கள்

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

Kumari Kandam

Lord Siva The First Siddhar - Tamil

18 Siddhar - Tamil

ஆத்திசுவடி

கொன்றை வேந்தன் - விளக்கம்

Aathichudi Song HD

Aathichoodi- - For Kids - Tamil - Easy to Learn

Thursday, August 27, 2015

Nam Unave Namakku Marunthu 09 11 2014

Nam Unave Namakku Marunthu 08 11 2014

Nam Unave Namakku Marunthu 10 11 2014

Nam Unave Namakku Marunthu 14 11 2014

Nam Unave Namakku Marunthu 15 11 2014

Nam Unave Namakku Marunthu 16 11 2014

Nam Unave Namakku Marunthu 20 11 2014

Nam Unave Namakku Marunthu 21 11 2014

Nam Unave Namakku Marunthu 22 11 2014

Nam Unave Namakku Marunthu 23 11 2014

Nam Unave Namakku Marunthu 27 11 2014

Nam Unave Namakku Marunthu 28 11 2014

Nam Unave Namakku Marunthu 30 11 2014

Nam Unave Namakku Marunthu 08 12 2014

Nam Unave Namakku Marunthu 07 12 2014

Nam Unave Namakku Marunthu 06 12 2014

Nam Unave Namakku Marunthu 09 12 2014

Nam Unave Namakku Marunthu 15 12 2014

Naattu Maruthuvam | Kollu Kaai | Dt 25-08-15 | Sun TV

Naattu Maruthuvam | Drumstick | Indian Viagra

Naattu Maruthuvam | Sunberry | Manathakkali | Treats liver cirrohsis

Naattu Maruthuvam | சீந்தில்_Seenthil | Episode 41 | Dt 07-01-14

Naattu Maruthuvam - கொய்யா பழம்_Guava fruit | Episode 42 | Dt 08-01-15

Naattu Maruthuvam | Kazharchi Kaai | Treats poly-cystic ovaries

Naattu Maruthuvam | Lemon | More than just for taking away 'drishti'

Naattu Maruthuvam | Betel Leaf

Naattu Maruthuvam | Nandhiyavattai | Conjunctivitis's Enemy

Naattu Maruthuvam | Seemai Agathi | Ring worm's enemy

Naattu Maruthuvam | Seemai Agathi | Ring worm's enemy

Naattu Maruthuvam | Mundakathan Keerai | Goodbye to bald spots

Saturday, August 22, 2015

Lemon Rice - Easy South Indian Recipe

Pudina Rice or Mint Rice

Kothamalli Sadam (Coriander Rice) Recipe in Tamil | கொத்தமல்லி சாதம்

Adai recipe in Tamil - Protein rich food

Vegetable Biryani Recipe in Tamil | வெஜிடபுள் பிரியாணி

Ven Pongal Recipe-Pongal Recipe in Tamil-Indian Breakfast Recipe By Heal...

Paal Kozhukattai Recipe-Modak in Milk-Pal Kolukattai Recipe By Healthy F...

Vegetable Wheat Idiyappam-Vegetable Wheat Noodles-Wheat Nool Puttu By He...

How to make idiyappam in Tamil ( English subtitle ) - இடியாப்பம் செய்முறை

Idli,dosai maavu in tamil இட்லி தோசை மாவு அரைப்பது எப்படி? - [Recipe- 11]

Kitchen Galatta | குஷ்பூ இட்லி - Khushboo Idli | Dt 02-06-15 | SunTV

Kitchen Galatta - உளுத்தம் பருப்பு சாதம்_Ulutham Paruppu | Ep45 |Dt 24-0...

Naattu Maruthuvam - Ammaan Pacharisi - அம்மான் பச்சரிசி | Dt 23-03-15

Naattu Maruthuvam | கோவைக்காய் - Little Gourd | Dt 16-03-15

Naattu Maruthuvam | Coconut தேங்காய் | Dt 11-06-15 | SunTV

Naattu Maruthuvam | Badam | 05-06-15

Naattu Maruthuvam | சுக்கு - Dry Ginger | Dt 24-04-15

Naattu Maruthuvam | ஜாதிக்காய் | Dt 20-04-15

Naattu Maruthuvam - உடல் பருமன் - Obesity | Dt 12-03-15

Naattu Maruthuvam | Lemon | More than just for taking away 'drishti'

Naattu Maruthuvam | Cumin | Stomach Ache Relief

Naattu Maruthuvam - முள்ளங்கி, Radish | Episode 49

Naattu Maruthuvam - பாகற்காய்_Bitter Gourd | Ep 74 | Dt 27-02-15

Naattu Maruthuvam - பப்பாளி - Papaya | Episode 73 | Dt 26-02-15

Naattu Maruthuvam - அரச இலை | Episode 67 | Dt 18-02-15

Naattu Maruthuvam - முட்டைக்கோஸ் - Cabbage | Episode 68 | Dt 19-02-15

Naattu Maruthuvam - லவங்க பட்டை | Episode 63 | Dt 12-02-15

Naattu Maruthuvam - பூண்டு - Garlic | Episode 69 | Dt 20-02-15

Naattu Maruthuvam - பப்பாளி - Papaya | Episode 73 | Dt 26-02-15

Naattu Maruthuvam - பொன்னாம் காணி | Episode 61 | Dt 10-02-15

Naattu Maruthuvam - வல்லாரு கீரை | Episode 60 | Dt 06-02-15

Naattu Maruthuvam | கருவேப்பிலை - Karuveppilai | Dt 06-03-15

Naattu Maruthuvam | ஜாதிக்காய் | Dt 20-04-15

Naattu Maruthuvam | சுக்கு - Dry Ginger | Dt 24-04-15

Naattu Maruthuvam | கடுக்காய் | Dt 15-04-15

Naattu Maruthuvam | Kazharchi Kaai | Treats poly-cystic ovaries

Naattu Maruthuvam | குப்பைமேனி,தும்பை,கரிசலாங்கண்ணி | Dt 03-03-15

Naattu Maruthuvam - அத்திப்பழம் - Aththi Pazham | Episode 44

Naattu Maruthuvam | தக்காளி_Tomato | Episode 47 | Dt 19-01-15

Naattu Maruthuvam | Turmeric | Beauty & Health

Naattu Maruthuvam | Drumstick | Indian Viagra

Naattu Maruthuvam | Lemon | More than just for taking away 'drishti'

Naattu Maruthuvam - Tharai Pasalai | Dt 22-07-15 | Sun TV

Naattu Maruthuvam | Vasambu| Dt 20-08-15 | Sun TV

Sunday, August 9, 2015

KH - a poem about KB

Nam Unave Namakku Marunthu 30 4 2014

Captain TV 23 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 22 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 21 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 10 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 09 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 09 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 15 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 18 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 17 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 16 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 28 03 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 02 04 2014 Nam Unave Namakku Marunthu

Captain TV 07 04 2014 Nam Unave Namakku Marunthu

Paarambariya Maruthuvam - Episode 530 - December 11, 2014

Paarambariya Maruthuvam - Episode 530 - December 11, 2014

Paarambariya Maruthuvam - Episode 531 - December 12, 2014

Paarambariya Maruthuvam - Episode 531 - December 12, 2014

Paarambariya Maruthuvam - Episode 529 - December 10, 2014

Paarambariya Maruthuvam - Episode 529 - December 10, 2014

Paarambariya Maruthuvam - Episode 550 - December 31, 2014

Paarambariya Maruthuvam - Episode 550 - December 31, 2014

Paarambariya Maruthuvam - Episode 549 - December 30, 2014

Paarambariya Maruthuvam - Episode 548 - December 29, 2014

Paarambariya Maruthuvam - Episode 547 - December 28, 2014

Paarambariya Maruthuvam - Episode 546 - December 27, 2014

Paarambariya Maruthuvam - Episode 545 - December 26, 2014

Paarambariya Maruthuvam - Episode 544 - December 25, 2014

Paarambariya Maruthuvam - Episode 540 - December 21, 2014

Paarambariya Maruthuvam - Episode 539 - December 20, 2014

Paarambariya Maruthuvam - Episode 537 - December 18, 2014

Paarambariya Maruthuvam - Episode 537 - December 18, 2014

Paarambariya Maruthuvam - Episode 538 - December 19, 2014

Naattu Maruthuvam | அதிமதுரம் | Dt 03-04-15

Naattu Maruthuvam - அத்திப்பழம் - Aththi Pazham | Episode 44

Naattu Maruthuvam | பேரிட்சை பழம் - Dates | Dt 22-04-15

Naattu Maruthuvam | ஜாதிக்காய் | Dt 20-04-15

Naattu Maruthuvam | சுக்கு - Dry Ginger | Dt 24-04-15

Naattu Maruthuvam | கடுக்காய் | Dt 15-04-15

Naattu Maruthuvam - லவங்க பட்டை | Episode 63 | Dt 12-02-15

Naattu Maruthuvam | சுக்கு - Dry Ginger | Dt 24-04-15

Naattu Maruthuvam - உடல் பருமன் - Obesity | Dt 12-03-15

Naattu Maruthuvam | கற்றாழை - Aloe Vera | Dt 04-03-15

Naattu Maruthuvam | குப்பைமேனி,தும்பை,கரிசலாங்கண்ணி | Dt 03-03-15

Naattu Maruthuvam | கருவேப்பிலை - Karuveppilai | Dt 06-03-15

Naattu Maruthuvam - கேச பராமரிப்பு - Hair Care | Dt 13-03-15

Naattu Maruthuvam - வல்லாரு கீரை | Episode 60 | Dt 06-02-15

Naattu Maruthuvam | தக்காளி_Tomato | Episode 47 | Dt 19-01-15

Naattu Maruthuvam | Coconut தேங்காய் | Dt 11-06-15 | SunTV

Naattu Maruthuvam | மரிக்கொழுந்து, தவணம் |Dt 18-06-15 | SunTV

Naattu Maruthuvam | Milakai Poondu | Dt 30-06-15 | Sun TV

Naattu Maruthuvam - Vellai erukkam | Dt 14-07-15 | Sun TV

Naattu Maruthuvam | Lavangam Pattai | Dt 21-07-15 | SunTV

Naattu Maruthuvam - Tharai Pasalai | Dt 22-07-15 | Sun TV

Naattu Maruthuvam | Coffee Kottai | EP1-184 | Dt 28-07-15 | SunTV

Naattu Maruthuvam | Murungai Ilai | Dt 31-07-15 | Sun TV

Naattu Maruthuvam | Kunguma Poo | Dt 04-08-15 | Sun TV

Naattu Maruthuvam | Kunguma Poo | Dt 04-08-15 | Sun TV

பிறமொழி கலவாது உரையாடவேண்டியது ஏன்!

யாழ்ழில் அப்துல் கலாமின் உரை

Address at Jaffna University By Dr.APJ Abdulkalam [Yalpanam, Sri lanka, ...

Thursday, August 6, 2015

எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?


எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்...

Posted by Sendhil Kumar Dsk on Saturday, June 27, 2015

Saturday, August 1, 2015

தமிழில் பலன் தரும் முத்திரைகள்

நவீன எளிய தமிழில் வாசி யோகா பகுதி 2

நவீன எளியதமிழில் வாசி யோகா பகுதி 1

வியாதிகள் இல்லை வாசி போதும்

vasi yogam :வாசி யோகம் பகுதி பத்து

vasi yogam :வாசி யோகம் பகுதி ஒன்பது

vasi yogam :வாசி யோகம் பகுதி எட்டு

vasi yogam :வாசி யோகம் பகுதி ஏழு

Vaasi Yogam - About Rules and Regulations | வாசியோகம் 612

புத்திசாலி நாய்


இங்கிலாந்தில் கணிதம் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட விசித்திர நாய்க்குட்டி: வீடியோ….. Watch brainy Shih Tzu dog solve...

Posted by தமிழ் நண்பன் Tamil Daily News and Etc on Saturday, August 1, 2015

Vaasi Yogam. Healer Baskar (Peace O Master)

Friday, July 31, 2015

What a memory power! Sivakumar amazing speech...

Actor Sivakumar speech at Jayakanthan 80

Adayalam 09/29/12

Gopinath Speech - SSCET Palani

நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? Why good people always su...

மனதை புண்படுத்துபவரை எப்படி சமாளிப்பது? - Relationship, love, family-Sad...

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி!

பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? How to come out of fear - Sadhguru Tam...

ஆனந்தமாக வாழ்வது எப்படி PART 3

எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி? - Sadhguru Tamil Video

வாழ்வதற்குள் மரணம் வந்துவிட்டால்... Sadhguru Tamil Video

சத்குருவிற்கும் சித்தர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? Sadhguru Tamil Video

Wednesday, July 29, 2015

Abdul Kalam to Ajith | Actor Vivek reveals about his Experiences

APJ Abdul Kalam says "Vivek is my Thick Friend" | Galatta Tamil

Abdul Kalam's Order to Vivek

Abdul Kalam Interview-Part-04

Abdul Kalam Interview-Part-03

Abdul Kalam Interview-Part-03

Abdul Kalam Interview-Part-02

Abdul Kalam Interview-Part-01

Actor Sivakumar Talks about Dr APJ Abdul Kalam [ RED PIX ]

APJ Kalam Interview with vivek on eve of Diwali festivel

இளைஞர்களின் நாயகன் அப்துல் கலாம் நினைவலைகள்..


இளைஞர்களின் நாயகன் அப்துல் கலாம் நினைவலைகள்... புகைப்படத் தொகுப்பாக... http://bit.ly/1LR2uJjசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க... http://bit.ly/1LR2uJj#ஏவுகணைநாயகன் #ராக்கெட்நாயகன் #அப்துல்கலாம்

Posted by Vikatan EMagazine on Tuesday, July 28, 2015

Tuesday, July 28, 2015

சலாம் கலாம்


#ஏவுகணைநாயகன் #ராக்கெட்நாயகன் #அப்துல்கலாம்

Posted by Vikatan EMagazine on Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்

அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்  

டாக்டர் அப்துல் கலாம் - இந்தியாவின் விஞ்ஞானி


முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல  சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

 
 
(நன்றி; தி இந்து) 

* ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை தொடங்கினார்.

* திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார்.  
* சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.

*  பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அபிவிருத்தி பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு  சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்துக்காக வடிவமைத்துக் கொடுத்தார்.  

* பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த குழுவில் (INCOSPAR) ஒரு அங்கமாகவும் அப்துல் கலாம் இருந்தார்.

ஏவுகணை உருவாக்கம்:


* 1969-ம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(ISRO) மாற்றப்பட்டார். அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுவதற்கான ஏவுகணை (launcher) (எஸ். எல். வி-III) தயாரிக்கும திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

* 1980-ல் எஸ். எல். வி-III ஏவுகணை 'ரோஹினி' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக  விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் சேர்ந்தது போன்றவை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. எஸ். எல். வி. திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறுவார்.

* கலாம் 1965-ல் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விண்கலத் திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969-ல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

* 1963–64 இல், அவர் நாசாவின் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்ஃபீல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான தளம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.

* 1970க்கும் 1990க்கும் இடையில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட போலார் எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எல்.வி.3 ஆகிய ஏவுகணை திட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தன.

* தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான  பொக்ரான் அணுகுண்டு திட்டத்தைக் காண்பதற்காக முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார்.

* 1970-ல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோஹிணி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை!

* 1970களில், வெற்றிகரமாக ஏவப்பட்ட எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வேலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும், பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தின் மூலம்  விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார்.

* அப்துல் கலாமின் ஏவுகணை உருவாக்கும் திறமையால் 1980களில், அவரை மத்திய அரசு  கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி.எஸ். அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.

தலைமை அறிவியல் ஆலோசகர்:

(நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்)


* 1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு அளித்தார்.

* 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது.

* 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக வடிவமைத்த டேப்லெட் கணினி 'கலாம்-ராஜூ டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது. 

இந்தியாவின் சக்தி - ப்ரமோஸ்

ஆயுதங்கள் உருவாக்கத்தில் இந்தியா கொஞ்சம் வீக்தான். சீனாவே பாராட்டினாலும், அர்ஜுன் டேங்க் இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட் ப்ராஜெக்ட் மிகவும் தாமதமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், BrahMos பிராஜெக்ட் மட்டும் சூப்பர் சக்ஸஸ். யார் காரணம்? அப்துல் கலாம்.
 
‘ரோஹிணி’ செயற்கைக் கோள் வெற்றிக்குப் பிறகு, Integrated Guided Missile Development திட்டத்தின் மூலம் ஏவுகணை மேல் ஏவுகணை விட்டு இந்தியாவின் சக்தியை உலகுக்கு பறைசாற்றினார் கலாம். ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட BrahMos ப்ராஜெக்ட்தான், உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.
 

ரஷ்யாவுடன் இந்தியா இணைந்து BrahMos ஏவுகணையை உருவாக்கலாம்’ என்று அப்துல் கலாம் நினைத்த நொடி, இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையில் முக்கியமான தருணம். ப்ரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தில் கலாம் வகித்த பங்கைத் தெரிந்துகொள்ள ‘ப்ரமோஸ் ஏவுகணையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஏ. சிவதாணு பிள்ளை எழுதிய ‘The Path Unexplored’ புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியதே அப்துல் கலாம்தான்.  


அதில், சிவதாணு பிள்ளை, அப்துல் கலாம் 1995-ல் தன்னிடம்  க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்துக்கான  இந்தியா - ரஷ்யா கூட்டுமுயற்சிக்கு தலைமை செயல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார் என்று எழுதியிருக்கிறார். ப்ரமோஸ் உருவாக்கத்தில் பிள்ளை என்ன திட்டத்தைச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்வாராம் கலாம். அதேபோல், கலாம் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக எந்தக் கோப்புகளை அனுப்பினாலும், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கையெழுத்திட்டு திருப்பி அனுப்புவாராம்.
இன்று, ப்ரமோஸ் ஏவுகணைதான் உலகிலேயே மிகவேகமான க்ரூஸ் ஏவுகணை. ஏன், உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு இந்தியாதான். ப்ரமோஸ் வெற்றியில் முக்கியப் பங்கு அப்துல் கலாமுக்கு இருக்கிறது.

ப்ரமோஸ் சீறிப்பாய்வதைப் பார்ப்பதற்கே கெத்தாக இருக்கும்


 
 
கலாமின் கனவு இந்தியா 2020!
 
 

'எப்போது பார்த்தாலும் வீண் கனவு கண்டு கொண்டே இருக்காதே! எல்லாம் பகல் கனவு தான்!' இப்படி தான் 'கனவு' என்ற வார்த்தை நம் மனதில் இந்த மனிதர் பேசுவதற்கு முன் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை, கண்களை திறந்து கொண்டும் காண முடியும் என்று புரிய வைத்தவர் அப்துல் கலாம். இன்று இந்தியா 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். அவர்கள் அனைவரது பேச்சிலும் 'அப்துல் கலாம் கனவு கண்டது போல் இந்தியா 2020க்குள் வல்லரசாகும்' என்றுதான் மேற்கோள் காணப்படும்.

இந்தியாவிற்காக அவர் கண்ட நம்மை காண சொன்ன கனவு மிகப்பெரியது, மிகச்சிறந்தது. ஒருவேளை அவர் இந்திய குடியரசு தலைவர் ஆகாமல் போயிருந்தால் இதே விஷயத்தை ஏதோ ஒரு கல்லூரியின் விழாவில் மாணவர்களிடையே புகுத்தி நமக்குள் இந்தியாவின் வல்லரசு கனவுக்கான விதையை விதைத்திருப்பார்.


 
அவர் கண்ட கனவில் முதலாவது, இந்தியாவில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பது தான். இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் அளவுகளான ஜிடிபி மூலம் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 1996களில் மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் 15வது இடத்தில் இருந்தது. அதனை 2020ல் 4வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. 

தொடர்ந்து உள்ளூர் சந்தைகளை ஊக்குவிப்பது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நிதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தொழிநுட்ப மேம்பாடுகளை கொண்டுவர நிலையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பது தான் அவர் கண்ட முதன்மையான கனவு. மேலைநாடுகளில் இருந்த CAD மற்றும் CAM போன்ற இயந்திரவியலின் புதுமைகளை பற்றி கலாம் ஆரம்பத்தில் இருந்தே ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அவரது சீரிய முயற்சியால் பல கல்லூரிகளில் இந்த பாடங்கள் இடம்பெற்றன.


இந்தியாவை உணவு பற்றாக்குறை இல்லாத நாடாகவும், விவசாய வளமிக்க நாடாகவும் மாற்ற வேண்டும், இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்த நிலையை மாற்ற உணவுக்கான வழிவகைகளை செய்து விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்.
 
உற்பத்தி துறை தான் இந்தியாவின் வருங்காலம் என்று அவர் குடியரசு தலைவராக இருந்தபோது இந்தியா 2020 புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று மேக் இன் இந்தியா திட்டத்தில் அரசு கணித்திருக்கும் அளவுகள் அப்துல் கலாமின் கணிப்புகளுடன் பொருந்துகின்றன என்பது ஆச்சர்யமாக உள்ளது. தற்போது வந்துள்ள திட்டத்தை பல வருடங்களுக்கு முன் கணித்திருக்கிறார் என்றால் அவர் மாமனிதர் தானே!

இந்தியாவில் சிறப்பான சாலைகள் இல்லாதது தான் இந்தியாவின் உற்பத்திதுறை வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதை கூறி இருந்தார். அதன்படி தான் அன்றைய பிஜேபி அரசு தங்க நாற்கர சாலை திட்டத்தையும், துறைமுகங்களை இணைக்கும் சாலைகளையும் கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குள்ள தொழில்களையும் அதில் பணிபுரியும் பணியாட்களின் திறனையும் அதிகரிக்க சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்தியாவுக்கு அனைத்து துறைகளிலும் வல்லமைமிக்க மனித வளத்தை அளிக்க முடியும் என்றார். இந்த கனவுகளை இந்திய இளைஞர்களால் எளிதில் சாத்தியப்படுத்த முடியும் என நம்பியவர் கலாம்.


ஒரு சினிமா நடிகரின் பேச்சையும், ஒரு கிரிக்கெட் வீரர் சொல்லும் குளிர்பானத்தை குடித்துக்கொண்டும் இருந்த இளைய சமுதாயம் 83 வயது இளைஞர் சொன்னால் இந்தியாவை உயர்த்த எண்ண வேண்டுமானாலும் செய்வோம் என மாறியது. இளைஞர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்களது சக்தியை சிறப்பாக செயல்படுத்தினால் இந்தியா உலகின் அழிக்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் அச்சமில்லை என்றார்.

அவரது 'கனவு இந்தியா' இன்னும் உருவாகவில்லை. ஆனால் அவர் சொன்ன பாதையில் உருவாகி கொண்டிருக்கிறது. அவர் கனவு கண்ட தேசத்தை அவருக்காக உருவாக்கி தருவது அவர் நம்பிக்கை வைத்த இளைஞர்களின் கடமை. இங்கு ஊரைச் சுற்றும் இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகை சுற்றும் செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணைச் சுற்றுவார்கள். இந்தியா 2020-ம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட 'கனவு இந்தியா'வாக உருவாகும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் செயலில், கோடிக்கணக்கான அப்துல்கலாம்களை பார்ப்பது மட்டுமே இந்தியாவின் தற்போதைய இலக்கு. 


கனவு காணுங்கள்! அப்துல் கலாம் மறையவில்லை! இந்தியாவின் வளர்ச்சிக்கான கனவுகள் உள்ளவரை கலாமை அழிக்க முடியாது!

அப்துல் கலாமுக்கு பிடித்த திருக்குறள்


#ஏவுகணைநாயகன் #ராக்கெட்நாயகன் #அப்துல்கலாம்

Posted by Vikatan EMagazine on Tuesday, July 28, 2015

Wednesday, July 22, 2015

ஞானதானம்: தீட்சை

ஞானதானம்: தீட்சை: குருவே சரணம்! குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...

ஞானதானம்: சாகாக்கல்வி தரும் மரணமில்லா பெருவாழ்வு

ஞானதானம்: சாகாக்கல்வி தரும் மரணமில்லா பெருவாழ்வு: சாகாக்கல்வி தரும்   மரணமில்லா பெருவாழ்வு தங்கஜோதி ஞான சபை அறக்கட்டளை கன்னியாகுமரி எல்லா ஜீவராசிகளைப் போலவே மனிதனும் பிறக்கிறான...

ஞானதானம்: 4. பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)

ஞானதானம்: 4. பிராணயாமம் - (அட்டாங்க யோகம்): 4. பிராணயாமம்:       ஐவருக்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்      உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு       மெய்யர்க்குப் பற்றுக் கொடுக...

ஞானதானம்: ஜீவகாருண்யமே முக்திக்கு முதற்படி

ஞானதானம்: ஜீவகாருண்யமே முக்திக்கு முதற்படி: திருவருட்பா வசனம் :       நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்.  இவ்வருள்...

ஞானதானம்: 4. பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)

ஞானதானம்: 4. பிராணயாமம் - (அட்டாங்க யோகம்): 4. பிராணயாமம்:       ஐவருக்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்      உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு       மெய்யர்க்குப் பற்றுக் கொடுக...

ஞானதானம்: ஜோதி வழிபாடு

ஞானதானம்: ஜோதி வழிபாடு: ஜோதி வழிபாடு        ஜோதி வழிபாடு என்னும் சொற்களை நன்கு சிந்தித்துப் பொருள் கொள்வோமானால் உண்மை ஞானம் நம்மால் உணர முடியாமல் போகாது.  ...

ஞானதானம்: 5. பிரத்தியாகாரம் - (அட்டாங்க யோகம்)

ஞானதானம்: 5. பிரத்தியாகாரம் - (அட்டாங்க யோகம்): 5.  பிரத்தியாகாரம்        கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்      கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்      பண்டுகந் தெங்கும் ப...

ஞானதானம்: தசாவதார விளக்கம்

ஞானதானம்: தசாவதார விளக்கம்: பத்து அவதாரங்கள்: 1. மச்சாவதாரம்:      முதன் முதலில் தண்ணீரில் தான் ஜீவசக்திகள் உண்டாயின.  அதாவது நம் கண்களுக்குத் தெரிய...

ஞானதானம்: தவம் எப்படிச் செய்ய வேண்டும்.

ஞானதானம்: தவம் எப்படிச் செய்ய வேண்டும்.: தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...

ஞானதானம்: தீட்சை

ஞானதானம்: தீட்சை: குருவே சரணம்! குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...

ஞானதானம்: உபதேசம்

ஞானதானம்: உபதேசம்: குருவே சரணம்! குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்கள...

ஞானதானம்: மெய்பொருள் – சித்தர் பாடல்கள்

ஞானதானம்: மெய்பொருள் – சித்தர் பாடல்கள்: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!! கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...

ஞானதானம்: ஜீவகாருண்யம்

ஞானதானம்: ஜீவகாருண்யம்: ஜீவகாருண்யம் – ஓர் ஆய்வு ஜீவகாருண்யம் என்றவுடன், உலகில் உள்ள எல்லோரும் நினைவு கூறுவது வள்ளலாரைத்தான். அவர் " ஜீவகாருண்யமே மே...

ஞானதானம்: 8. சமாதி - (அட்டாங்க யோகம்)

ஞானதானம்: 8. சமாதி - (அட்டாங்க யோகம்): 8. சமாதி:       விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்       சந்தியி லான சமாதியிற் கூடிடும்       அந்த மிலாத அறிவின் அரும்பொருள்     ...

ஞானதானம்: உயிர்

ஞானதானம்: உயிர்: குருவே சரணம்! குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...

ஞானதானம்: கண்களின் சக்திகள் (Part - 3)

ஞானதானம்: கண்களின் சக்திகள் (Part - 3): சூரிய சந்திர கலைகள்:       நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும்.  மோதித்தான் வரும்...

ஞானதானம்: கண்களின் சக்திகள் (Part - 2)

ஞானதானம்: கண்களின் சக்திகள் (Part - 2): சாயா தரிசனம்:      சிலர் சூரிய வெளிச்சத்திலும் சந்திர வெளிச்சத்திலும் தன் நிழலைக் கூர்ந்து பார்த்து விட்டு பார்த்துவிட்டு உடனே மேலே ஆ...

ஞானதானம்: கண்களின் சக்திகள் (Part - 1)

ஞானதானம்: கண்களின் சக்திகள் (Part - 1): கண்களின் சக்திகள்:       அன்பர்களுக்கு வணக்கம் இந்த article எழுதும் நோக்கம் சில அன்பர்கள்

Monday, July 13, 2015

Guru Peyarchi 2015-2016 -குரு பெயர்ச்சி 2015-2016Meenam மீன ராசி

Guru Peyarchi 2015-2016 -குரு பெயர்ச்சி 2015-2016Makara மகர ராசி

Guru Peyarchi 2015-2016 -குரு பெயர்ச்சி 2015-2016 Mithuna மிதுன ராசி

Guru Peyarchi Palangal 2015 Dhanusu Rasi By Dindigul P.Chinnaraj Astrolo...

Guru Peyarchi palangal 2015 Simmam Rasi by DINDIGUL P.CHINNARAJ ASTROLOG...

Guru Peyarchi 2015 Palangal for Kanni Rasi | Guru peyarchi 2015 to 201...

Guru peyarchi 2015-2015-Vrishbha குரு பெயர்ச்சி 2015-2016 ரிஷப ராசி

Guru Peyarchi 2015-2016 -குரு பெயர்ச்சி 2015-2016Kumbha கும்ப ராசி

Guru Peyarchi Palangal 2015 for Mesha Rasi

Guru peyarchi palangal 2015 ( குரு பெயர்ச்சி பலன்கள் 2015 )

Sunday, July 5, 2015

30 வகை சைட் டிஷ்

30 வகை சைட் டிஷ்
ல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு 'சைட் டிஷ் பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, 'இன்னிக்கு என்ன சைட் டிஷ் பண்றது’ என்று கவலையோடு யோசிக்க ஆரம்பிப்பவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ... சமையல் கலை நிபுணர் உஷாதேவி, தனது சமையல் ஞானத்தை தீவிரமாக பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து '30 வகை சைட் டிஷ்’ ரெசிபிகளை இங்கு வாரி வழங்கியிருக்கிறார்.
''சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண் என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கு விதம்விதமான சைட் டிஷ்களை கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், இந்தக் கோடையிலும் நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம்'' என உற்சாகம் பூரிக்க சொல்கிறார் உஷாதேவி.
காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் - கால் கிலோ, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன்,  பெரிய வெங்காயம், பெரிய தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப, தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், செட்டிநாடு பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் 'கட்’ செய்யவும். ஒரு தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண் டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இதில் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி... இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.

கோவைக்காய் வறுவல்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி... மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி    5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட... சுவை சூப்பராக இருக்கும்.

வெஜ் குருமா
தேவையானவை: கேரட் - 2, உருளைக்கிழங்கு, நூக்கல் -   தலா ஒன்று, பீன்ஸ் - 10 பச்சைப் பட்டாணி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 5 பல், ஏலக்காய் - 3, பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று, லவங்கம் - 5, தேங்காய் - அரை மூடி, முந்திரி - 10, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை -  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.  ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன்  சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.

பீட்ரூட் பொரியல்
தேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2  சர்க்கரை - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில்  கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம்,  கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.
இந்தப் பொரியல்... சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.

வாழைக்காய் சிப்ஸ்
தேவையானவை: வாழைக்காய் - 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக... அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.
இது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.

குடமிளகாய் சட்னி
தேவையானவை: குடமிளகாய் பெரியது - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  புளி - எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை  சேர்த்து... எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, உளுத்தம்பருப்பு  - - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.
இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.

வடைகறி
தேவையானவை: கடலைப்பருப்பு - 150 கிராம், பெரிய வெங்காயம் - 2 , பெரிய தக்காளி - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக  வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.

வாழைப்பூ கோலா உருண்டை
தேவையானவை: வாழைப்பூ - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி -    பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு - 250 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம், முந்திரி - 10, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
இது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஆலு புக்காரா
தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு - ஒரு பாக்கெட், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு விழுது - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம் (விருப்பப்பட்டால்) - தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம் வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.

மூலிகை சட்னி
தேவையானவை: வல்லாரைக் கீரை - (ஆய்ந்தது), புதினா இலை - தலா ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10,  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.
சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.

பகரா பேங்கன்
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 100 கிராம், தனியா - 3 டீஸ்பூன், எள்,  சீரகம் -  தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வேர்க்கடலை - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி...  தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கி... உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக் காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இது... சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

ஸ்வீட் கார்ன்  பனீர் கோஃப்தா
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - 100 கிராம், பனீர் - 50 கிராம், உருளைக்கிழங்கு - 2,  முந்திரிப் பருப்பு - 10, முந்திரி விழுது - சிறிதளவு, தக்காளி விழுது - 100 கிராம், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வெங்காயம் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா -  2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக சேர்த்து... அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

வாழைக்காய் சட்னி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - ஒரு பல், தக்காளி - 2, புளி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
இதை... இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, தேங்காய் துருவல்  - ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், முந்திரி - 10, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

கடாய் பனீர்
தேவையானவை: பனீர் - கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
மசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மசாலா பொடி தயாரிக்க  கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து... பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி,  இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி... எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
இது... சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

பப்பாளி சாலட்
தேவையானவை: பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு,  தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பப்பாளியை 'கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.

சேப்பங்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, கசகசா - 3 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி - பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட... சுவை அசத்தலோ அசத்தல்!

தயிர் வெண்டைக்காய்
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து... தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.
இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

பீர்க்கங்காய் கொத்சு
தேவையானவை: பீர்க்கங்காய் - அரை கிலோ, புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி.... சாதத்துடன் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு ஸ்டூ
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 3, தேங்காய் - அரை மூடி, இஞ்சி - சிறிதளவு, மிளகுத்தூள்  - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, தோல் சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து  கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.
இதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.

மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சர்க்கரை - 50 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

பூண்டு சட்னி
தேவையானவை: பூண்டுப் பல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து  வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில்  சேர்க்கவும்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.

அவியல்
தேவையானவை: முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, சேனைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - 5, சீரகம் - இரண்டு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), தயிர் - ஒரு கப்,  பூண்டு - 3 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

மஷ்ரூம் ரெட் கறி
தேவையானவை: மஷ்ரூம் - 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய்ப் பால் - 2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி - பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.
இதை... சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

பருப்பு தண்ணி மசாலா
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2,  சோம்பு, சீரகம் -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கறி பவுடர் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து.... பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

பட்டர்பீன்ஸ் பொரியல்
தேவையானவை: பட்டர் பீன்ஸ் - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, முந்திரி - 5, கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான  தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது... சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.

கீரை கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,  பச்சை மிளகாய் - 2, வறுத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை  டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் - சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு - கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

காளான் வதக்கல்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட், வெங்காயம் - ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்),  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

கொத்தமல்லி துவையல்
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் -  இரண்டு டேபிள்ஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
இது... இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.
தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி