Sunday, September 10, 2017

வீட்டுத் தோட்டம் கொத்தமல்லி கீரை வளர்ப்பு how to make coriander garden

வீட்டுத் தோட்டம் கொத்தமல்லி கீரை வளர்ப்பு how to make coriander garden

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம் || Kidney Stone Home Tips - 2

சர்க்கரை நோய் 100% குணமாக்க தொட்டால் சுருங்கி மூலிகை

பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை முழுமையாக கரைத்துவிடும்...

வீட்டுத் தோட்டம்-கொசு விரட்டும் மூலிகை

கற்பூரவள்ளி மருத்துவ குணங்கள் - Karpuravalli

உங்களுடைய சிறுநீரகம் அறிகுறிகள் உள்ளதா? அறிகுறிகள் Kidney Disease Symptoms

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம் | How to cure diabetes ...

சிறுநீரக நோய்களை தீர்க்கும் மிக அற்புதமான மூலிகைகள்

முருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

மூன்று மாதம் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்(curry leaves in...

தங்கம் அதிகமாக சிறிதுநேரம் உப்பில் வைத்து எடுங்கள்Get more jewells keep ...

இந்த மரத்தை வீட்டினுள் நட்டால் செல்வம் பெருகும்

வீட்டில் இருந்து இவைகளை நீக்கம் செய்த்தால் பணம் தானாகவே வரும் | Avoid Th...

உங்கள் வீட்டில் நிறைய பணம் சேரணுமா!... அப்போ இப்படி செய்து பாருங்கள்... ...

மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்!!!

வினை தீர்க்கும் விளக்கு தீபம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவத...

சர்க்கரை நோய் இருந்தால்.. இதை சாப்பிட்டு விடாதீர்கள்

இது தெரிந்தால் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க

அகத்தியர் துணை துவக்கப்பாடல்


Friday, May 26, 2017

சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்கம் கோவிலில் நேற்று வெள்ள நீர் புகுந்து சென்ற காட்சி


108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் - திருப்பதி, திருமலை

6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் - கும்பகோணம்.

14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.

41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்கள்

சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்கம் கோவிலில் நேற்று வெள்ள நீர் புகுந்து சென்ற காட்சி


Thursday, March 30, 2017

மந்திரம் - யந்திரம் - தந்திரம் - சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதா...

அலை இயக்கமும் ஆத்ம தரிசனமும் - வேதாத்திரி மகரிஷி.

எதிர்பார்த்தல் வேண்டாம் - வேதாத்திரி மகரிஷி

சித்தர்கள் காட்டிய வாழ்க்கை நெறி - வேதத்திரி மகரிஷி...

வேதாத்திரி மகரிஷி - அபூர்வ வீடியோ

Vethathiri Maharishi yoga Exercises

வேதாத்ரி மகரிஷி - பிரம்மஞானம்


Friday, March 24, 2017

கழுத்தில் சுருக்கம் உங்கள சுமாரா காண்பிக்குதா?


கழுத்தில் சுருக்கம் உங்கள சுமாரா காண்பிக்குதா?

கழுத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

சூரிய புறஊதாக்கதிர்களின் அதிகப்படியான தாக்கம், ஒழுங்கற்ற தூங்கும் முறை, புகைப்பிடித்தல் மற்றும் உடலில் சமநிலையற்ற ஹார்மோன்கள். இவைகள் தான் கழுத்தில் சுருக்கம் ஏற்பட முக்கியக் காரணம். கழுத்து சுருக்கத்தை போக்க சில பயனுள்ள ஈஸியான வீட்டு வைத்திய முறைகளை இப்போது பார்க்கலாம் வாங்க...

வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருப்பதால் இது கழுத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். ஒரு வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது தேனை கலந்து, அந்தக் கலவையை கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் அந்தக் கலவையைக் கழுத்தில் ஒரு மாஸ்க் போல போட்டு 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுத்தை கழுவி விட வேண்டும். 
 
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கின்றது. இது நமது உடலில் வயதாவதினால் ஏற்படும் சுருக்கங்களை வராமல் தடுக்கும். சில துளிகள் பாதாம் எண்ணெயை மிதமாக சூடேற்றி கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் மசாஜ் செய்யும் போது மேல் நோக்கி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை இதை செய்தால் சுலபமாக கழுத்து சுருக்கத்தைப் போக்கிவிடலாம்.   பப்பாளி பழம் பப்பாளியிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. பப்பாளிப் பழத் துண்டுகள் சிலவற்றை எடுத்து மசித்துக்கொள்ள வேண்டும். அதில் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சிறிது சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய அந்த கலவையை கழுத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு நாளைக்கு இதனை 2 அல்லது 3 முறை செய்யலாம்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் மாலிக் ஆசிட் உள்ளது. இது கழுத்து சுருக்கத்தை போக்கி இளமை தோற்றத்தைக் கொடுக்கும். கற்றழை ஜெல்லை எடுத்து கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். மேலும் சருமத்தை வெண்மையாக்க அதில் சிறிது எலுமிச்சைச் சாற்றை கலந்த தடவ வேண்டும். மற்றொரு முறை, கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் ஈ எண்ணெயை சேர்த்து கலந்தும் மசாஜ் செய்யலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிடலாம். 

 இஞ்சி
 கழுத்து சுருக்கத்தைப் போக்க இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும்.
இஞ்சியை துருவி அதனை அரைத்து சாறு எடுத்து அதில் சற்று தேனை ஊற்றி கலந்து கழுத்தில் தடவ வேண்டும். இது செய்வதனால் கழுத்து சுருக்கம் நீங்கி, இளமைப் பொழிவு வந்துவிடும்.
கேரட்
 கழுத்து சுருக்கத்தை தடுக்கும் கொலாஜனை கேரட் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவிடலாம்.

எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது இறந்த சரும செல்களை அழித்து வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. 2 முதல் 3 டீஸ்பூன் எலுமிச்சைச்சாற்றை கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும்.

அன்னாச்சிப் பழ ஜூஸ்

அன்னாச்சிப் பழத்தில் என்சைம்கள் இருக்கின்றது. இது சருமத்தை பொழிவாக்கி, இறந்த சரும செல்களை எளிமையாக அழித்துவிடுகிறது. சிறிது அன்னாச்சிப் பழ ஜூஸ் எடுத்து கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிலாம். இல்லையென்றால், சிறிது அன்னாச்சிப் பழத்தை எடுத்து கழுத்தில் தடவினாலும் அதுவும் சுருக்கத்தைப் போக்கும்.

Saturday, March 11, 2017

உடலில் உள்ள காந்த சக்தியை எப்படி பயன்படுத்துவது| How To Use Magnetic Pow...

VASI YOGAM / வாசியோகம்

இந்த ஐந்தையும் உணவில் சேர்த்து கொண்டால் டாக்டரிடம் செல்ல தேவையே இல்லை .-...

இரத்த அழுத்தம் குறைக்க உணவு - 7 Top Foods to Reduce Blood Pressure

TEA - டீ குடிப்பவரா? கட்டாயம் பாருங்க..

24. உடல் கழிவு நீக்கும் முறைகள்

sarkarai noiku (சர்க்கரை நோய் )

அனைத்து நோய்களையும் போக்கும் அதிசய எண்ணெய்..

சித்தர்களை நேரில் காணுதல்

காந்த விழி பயிற்சி

Thursday, February 23, 2017

குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

ஒட்டுண்ணி ஜியர்டயா லம்ப்லியா
குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்! 

இங்கு குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜியர்டயாஸிஸ் என்பது ஒரு குடல் தொற்றாகும். இது ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒட்டுண்ணி புரோட்டோசோனால் ஏற்படுவதாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், இது செரிமான மண்டலத்தையே நாசமாக்கிவிடும்

 ஜியர்டயாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாது. ஆனால் இப்பிரச்சனையை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் ஜியர்டயாஸிஸ் குடல் தொற்றில் இருந்து விடுபடுவதற்கான இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை எவ்வித பக்கவிளைவும் இல்லாத மிகவும் பாதுகாப்பான வழிகளாகும் ஒட்டுண்ணி ஜியர்டயா லம்ப்லியா இந்த ஒட்டுண்ணி சிறு குடலைத் தாக்குவதோடு, கடுமையாக பாதிக்கவும் செய்யும். இது குடலினுள் கட்டிகளாக உருவாகி, உணவுகள் மற்றும் குடிநீரின் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. 

அறிகுறிகள் 

இந்த ஒட்டுண்ணி உடலினுள் இருந்தால், அதனால் நாள்பட்ட வயிற்றுப் போக்கு அல்லது தொடர்ச்சியான வயிற்றுப் போக்கை சந்திக்க நேரிடும். அதோடு வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் திடீர் எடை குறைவு போன்றவையும் ஏற்படும். சரி, இப்போது இந்த ஒட்டுண்ணியை அழிக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.   பூண்டு பூண்டுகளில் உள்ள மருத்துவ குணத்தால், ஒட்டுண்ணி ஜியர்டியா லம்ப்லியாவின் இயக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதன் தாக்கம் தடுக்கப்படும். ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், உடனே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிடுங்கள். இதனால் எப்பேற்பட்ட ஒட்டுண்ணியும் அழிந்து வெளியேறிவிடும். 

தயிர் புளித்த தயிரில் ஜியர்டியா லம்ப்லியாவை எதிர்த்துப் போராடும் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் அதிகளவில் இருக்கும். ஆகவே அவ்வப்போது புளித்த தயிரை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். 

அதிகளவு நீர் ஜியர்டயாசிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் தென்பட்டால், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். 

பீட்ரூட் ஜூஸ் 

பீட்ரூட்டில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதன் ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், ஜியர்டயாஸிஸ் தொற்றில் இருந்து விலகி இருக்கலாம். 

தேங்காய் 

தேங்காயில் லாரிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது வைரஸ் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. எனவே இந்த தேங்காய் அடிக்கடி சாப்பிடுங்கள்.


கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங்களா?

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :
கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங்களா?
கரும்புள்ளியை மறையச் செய்ய இந்த எளிய குறிப்புகளை முயற்சித்துப் பாருங்கள். இவை உடனேயே பலன் தரக் கூடியவை. பக்க விளைவுகளை தராதவை.
கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம். சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி.
சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிரஆழமான சென்று இந்த கரும்புள்ளியை அகற்றாது. சருமத்தை சுத்தப்படுத்தி கரும்புள்ளியை அக்ற்ற எளிதான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எளிதில் பயன் தரும்.
15 நிமிட உருளை மசாஜ் :
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்துகுளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தய கீரை :
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவிசிறிதுநேரம் காயவைத்துபிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால்விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள்
கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

தயிருடன் எலுமிச்சை :
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரைஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்துதடவி வந்தால்கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :
எலுமிச்சை சாற்றுடன்சர்க்கரையை சேர்த்து கலந்துமுகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடுசருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறிசருமம் பளிச்சென்று காணப்படும்.



ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!
 ணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது. பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே செலவழிக்கின்றனர். `சார்ஜ் எடு... கொண்டாடு!என்பதுபோல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்துபோகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும்திறனை பாதிக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவை என்னென்ன... பார்ப்போம்!

பேட்டரியில் உள்ள சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும்போது கதிர்வீச்சு வெளிப்படும் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனில் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

பேட்டரி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்போனில் பேசவே கூடாது. மின்சாரம் தாக்கலாம். அதிக வெப்பம் காரணமாக, ஸ்மார்ட்போன் வெடித்துவிடுவதுகூட நிகழலாம். அதிக வெப்பம் மூளையையும் பாதிக்கும்.

மலிவு விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு அதிகம். மூளை நரம்புகளின் செயல்திறன் பாதிக்கலாம்.

வளரும் குழந்தைகளின் மூளை, இளைஞர்களைவிட இருமடங்கு அதிகமாக கதிர்வீச்சை உள்வாங்கும் ஆற்றல் உடையது. எனவே, முடிந்தவரை குழந்தைகள் ஸ்மார்ட்போனில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அழுகிறார்கள், அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுத்து விளையாட அனுமதிக்ககூடாது.


கர்ப்பிணிகள் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறைபாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.

வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேசவேண்டியிருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர்போன்களைப் பயன்படுத்தலாம். அதுவும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே பலமணிநேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கவனச்சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட்போனை வலது மற்றும் இடது காதுக்கு மாற்றிவைத்துப் பேச வேண்டும்.

யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக்கலாம்.

சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு தரமற்ற ஸ்மார்ட்போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.

தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்..

பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இருட்டில் ஸ்மார்ட்போனின் திரையைப் பலமணிநேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைக்குறைபாடுகளும் ஏற்படலாம்.


இரவு தூங்கும்போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட்போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி!


Tuesday, February 14, 2017

பித்த வெடிப்பு மறைய


பித்த வெடிப்பு மறைய

நன்னாரி : நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பாதியாக குறையும்போது அதனை வடிகட்டி வைக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வெடிப்பு மறையும்.

கரிசலாங்கண்ணி : வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

பப்பாளி பழம் : பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். காலை மாலை தினமும் செய்துவந்தால் பாதங்கள் மிருதுவாகும். வெடிப்பும் மறையும்.

உருளைக் கிழங்கு : உருளைக்கிழங்கை அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால் வெடிப்பு மறைந்து, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.


வெங்காயம் : வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதனை கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.


உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்க


உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்க, இந்த 6 விஷயங்கள் தான் காரணம் என்று தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம்.
சமீப காலமாக உங்கள் வீட்டில் செலவு அதிகமாக உள்ளதா? எவ்வளவு சம்பாதித்தாலும், வீட்டில் பணம் நிலைப்பதே இல்லையா? அப்படியெனில், உங்கள் வீட்டில் பணத்தை தங்கவிடாமல் செய்யும் சில விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம். சரி, இப்போது வீட்டில் செலவை அதிகரிக்கும் அந்த விஷயங்கள் எவையென்று பார்ப்போம்.
விஷயம் #1 வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் செலவு அதிகரிப்பதோடு, வருமானமும் குறைவாகவே இருக்கும்.
விஷயம் #2 வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதேனும் விரிசல் விட்டிருந்தால், அதை உடனடியாக மாற்றுங்கள். ஏனெனில் இவைகள் வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
விஷயம் #3 பாதிக்கப்பட்ட அல்லது உடைந்த சிலைகளை வீட்டினுள் வைத்திருந்தால், அதுவும் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள தெய்வங்களின் போட்டோக்கள் கிழிந்திருந்தால், அதையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
விஷயம் #4 முட் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்கக்கூடாது. இது பணப் பிரச்சனையை வீட்டில் உண்டாக்கும். ஆகவே இந்த மாதிரியான செடிகளை வீட்டின் வெளியே வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
விஷயம் #5 உங்கள் வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், அவை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நுழையச் செய்து, பணப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

விஷயம் #6 வீட்டில் செயல்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விட்டிருந்தல், அதை உடனடியாக சரிசெய்யுங்கள் அல்லது வெளியேற்றுங்கள். இல்லாவிட்டால், செயல்படாத கடிகாரமானது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கும்.