Thursday, February 23, 2017

குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

ஒட்டுண்ணி ஜியர்டயா லம்ப்லியா
குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்! 

இங்கு குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜியர்டயாஸிஸ் என்பது ஒரு குடல் தொற்றாகும். இது ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒட்டுண்ணி புரோட்டோசோனால் ஏற்படுவதாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், இது செரிமான மண்டலத்தையே நாசமாக்கிவிடும்

 ஜியர்டயாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாது. ஆனால் இப்பிரச்சனையை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் ஜியர்டயாஸிஸ் குடல் தொற்றில் இருந்து விடுபடுவதற்கான இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை எவ்வித பக்கவிளைவும் இல்லாத மிகவும் பாதுகாப்பான வழிகளாகும் ஒட்டுண்ணி ஜியர்டயா லம்ப்லியா இந்த ஒட்டுண்ணி சிறு குடலைத் தாக்குவதோடு, கடுமையாக பாதிக்கவும் செய்யும். இது குடலினுள் கட்டிகளாக உருவாகி, உணவுகள் மற்றும் குடிநீரின் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. 

அறிகுறிகள் 

இந்த ஒட்டுண்ணி உடலினுள் இருந்தால், அதனால் நாள்பட்ட வயிற்றுப் போக்கு அல்லது தொடர்ச்சியான வயிற்றுப் போக்கை சந்திக்க நேரிடும். அதோடு வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் திடீர் எடை குறைவு போன்றவையும் ஏற்படும். சரி, இப்போது இந்த ஒட்டுண்ணியை அழிக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.   பூண்டு பூண்டுகளில் உள்ள மருத்துவ குணத்தால், ஒட்டுண்ணி ஜியர்டியா லம்ப்லியாவின் இயக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதன் தாக்கம் தடுக்கப்படும். ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், உடனே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிடுங்கள். இதனால் எப்பேற்பட்ட ஒட்டுண்ணியும் அழிந்து வெளியேறிவிடும். 

தயிர் புளித்த தயிரில் ஜியர்டியா லம்ப்லியாவை எதிர்த்துப் போராடும் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் அதிகளவில் இருக்கும். ஆகவே அவ்வப்போது புளித்த தயிரை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். 

அதிகளவு நீர் ஜியர்டயாசிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் தென்பட்டால், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். 

பீட்ரூட் ஜூஸ் 

பீட்ரூட்டில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதன் ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், ஜியர்டயாஸிஸ் தொற்றில் இருந்து விலகி இருக்கலாம். 

தேங்காய் 

தேங்காயில் லாரிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது வைரஸ் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. எனவே இந்த தேங்காய் அடிக்கடி சாப்பிடுங்கள்.


கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங்களா?

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :
கரும்புள்ளி மறைய இந்த எளிய குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங்களா?
கரும்புள்ளியை மறையச் செய்ய இந்த எளிய குறிப்புகளை முயற்சித்துப் பாருங்கள். இவை உடனேயே பலன் தரக் கூடியவை. பக்க விளைவுகளை தராதவை.
கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம். சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி.
சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிரஆழமான சென்று இந்த கரும்புள்ளியை அகற்றாது. சருமத்தை சுத்தப்படுத்தி கரும்புள்ளியை அக்ற்ற எளிதான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எளிதில் பயன் தரும்.
15 நிமிட உருளை மசாஜ் :
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்துகுளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தய கீரை :
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவிசிறிதுநேரம் காயவைத்துபிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால்விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள்
கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

தயிருடன் எலுமிச்சை :
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரைஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்துதடவி வந்தால்கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை :
எலுமிச்சை சாற்றுடன்சர்க்கரையை சேர்த்து கலந்துமுகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடுசருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறிசருமம் பளிச்சென்று காணப்படும்.



ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!
 ணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது. பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே செலவழிக்கின்றனர். `சார்ஜ் எடு... கொண்டாடு!என்பதுபோல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்துபோகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும்திறனை பாதிக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவை என்னென்ன... பார்ப்போம்!

பேட்டரியில் உள்ள சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும்போது கதிர்வீச்சு வெளிப்படும் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனில் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

பேட்டரி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்போனில் பேசவே கூடாது. மின்சாரம் தாக்கலாம். அதிக வெப்பம் காரணமாக, ஸ்மார்ட்போன் வெடித்துவிடுவதுகூட நிகழலாம். அதிக வெப்பம் மூளையையும் பாதிக்கும்.

மலிவு விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு அதிகம். மூளை நரம்புகளின் செயல்திறன் பாதிக்கலாம்.

வளரும் குழந்தைகளின் மூளை, இளைஞர்களைவிட இருமடங்கு அதிகமாக கதிர்வீச்சை உள்வாங்கும் ஆற்றல் உடையது. எனவே, முடிந்தவரை குழந்தைகள் ஸ்மார்ட்போனில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அழுகிறார்கள், அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுத்து விளையாட அனுமதிக்ககூடாது.


கர்ப்பிணிகள் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறைபாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.

வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேசவேண்டியிருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர்போன்களைப் பயன்படுத்தலாம். அதுவும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே பலமணிநேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கவனச்சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட்போனை வலது மற்றும் இடது காதுக்கு மாற்றிவைத்துப் பேச வேண்டும்.

யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக்கலாம்.

சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு தரமற்ற ஸ்மார்ட்போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.

தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்..

பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இருட்டில் ஸ்மார்ட்போனின் திரையைப் பலமணிநேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைக்குறைபாடுகளும் ஏற்படலாம்.


இரவு தூங்கும்போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட்போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி!


Tuesday, February 14, 2017

பித்த வெடிப்பு மறைய


பித்த வெடிப்பு மறைய

நன்னாரி : நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பாதியாக குறையும்போது அதனை வடிகட்டி வைக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வெடிப்பு மறையும்.

கரிசலாங்கண்ணி : வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

பப்பாளி பழம் : பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். காலை மாலை தினமும் செய்துவந்தால் பாதங்கள் மிருதுவாகும். வெடிப்பும் மறையும்.

உருளைக் கிழங்கு : உருளைக்கிழங்கை அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால் வெடிப்பு மறைந்து, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.


வெங்காயம் : வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதனை கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.


உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்க


உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்க, இந்த 6 விஷயங்கள் தான் காரணம் என்று தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம்.
சமீப காலமாக உங்கள் வீட்டில் செலவு அதிகமாக உள்ளதா? எவ்வளவு சம்பாதித்தாலும், வீட்டில் பணம் நிலைப்பதே இல்லையா? அப்படியெனில், உங்கள் வீட்டில் பணத்தை தங்கவிடாமல் செய்யும் சில விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று அர்த்தம். சரி, இப்போது வீட்டில் செலவை அதிகரிக்கும் அந்த விஷயங்கள் எவையென்று பார்ப்போம்.
விஷயம் #1 வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் செலவு அதிகரிப்பதோடு, வருமானமும் குறைவாகவே இருக்கும்.
விஷயம் #2 வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதேனும் விரிசல் விட்டிருந்தால், அதை உடனடியாக மாற்றுங்கள். ஏனெனில் இவைகள் வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
விஷயம் #3 பாதிக்கப்பட்ட அல்லது உடைந்த சிலைகளை வீட்டினுள் வைத்திருந்தால், அதுவும் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள தெய்வங்களின் போட்டோக்கள் கிழிந்திருந்தால், அதையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
விஷயம் #4 முட் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்கக்கூடாது. இது பணப் பிரச்சனையை வீட்டில் உண்டாக்கும். ஆகவே இந்த மாதிரியான செடிகளை வீட்டின் வெளியே வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
விஷயம் #5 உங்கள் வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், அவை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நுழையச் செய்து, பணப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

விஷயம் #6 வீட்டில் செயல்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விட்டிருந்தல், அதை உடனடியாக சரிசெய்யுங்கள் அல்லது வெளியேற்றுங்கள். இல்லாவிட்டால், செயல்படாத கடிகாரமானது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கும்.


Sunday, February 12, 2017

தலை முழுவதும் பொடுகா?


தலை முழுவதும் பொடுகா?
வேப்பம் பூ : நாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். அதனை 50 கிராம் வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடாக இருக்கும் போது வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.  
கற்பூரம் : கற்பூரத்தை பொடி செய்து அதனை சூடான தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தலைகாட்டாது
உப்பு : உப்பு சிறந்த கிருமி நாசினி. பூஞ்சை மற்றும் பேக்டீரியாவை அழிக்கும். உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதனை கூந்தலின் வேர்க்கால்களில் த்டவி 5 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் பொடுகு மறைந்துவிடும். ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் நீர் சம அளவு கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும். வெள்ளையாக தென்படுவதும் நின்றுவிடும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறிலும் பொடுகை விரட்டும் சக்தி உள்ளது. எலுமிச்சை சாறை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். அதன் தோலைக் கொண்டும் ஸ்கால்ப்பில் அழுந்த தேய்த்தால் பொடுகு வருவதும் கட்டுப்படும்.


பாதங்களை மிருதுவாக்கனுமா?


பாதங்களை மிருதுவாக்கனுமா?
கருமையான வெடிப்புள்ள பாதங்களை காக்க இதோ டிப்ஸ் : பீர்க்கங்காய் நார் : பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
 பாத நகங்களின் அழுக்கை அகற்ற : பாத நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் எளிதில் போகாது. அவ்ரை பின் வைத்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக தீக்குச்சியின் கைப்பிடிக்கும் பகுதியில் நல்லெண்ணெயால் நனைத்து தீபத்தில் சூடு செய்து நக இடுக்கில் உள்ள அழுக்களை எடுத்தால் எளிதில் வெளிவந்துவிடும். நகங்களும் பளபளக்கும்.
 காபிப் பொடி : காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்.
வெடிப்பு மறைய : விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும். இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும். வெடிப்பு காணாம் போய்விடும்.

கல் உப்பு : கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள். இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.


Wednesday, February 8, 2017

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில்


நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில்

நோய் தீர்க்கும் மூலிகைகள் உங்கள் சமையலறையில் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கின்றன. பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள மஞ்சள், கடுகு, இஞ்சி பூண்டு என பலவற்றையும் அவை நோய் தீர்க்கும் குணத்தையும் பற்றியும் பார்த்திருப்பீர்கள். இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கணக்கிலடங்காதது. அவ்ற்றில் சிலவகைகளாவது நாம் தெரிந்து வைத்தால் நமக்குதானே நல்லது. அவ்வகையில் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மூலிகைகளும், அவை எந்த நோய்க்கு மருந்தாகிறது என்பதையும்தான். தொடர்ந்து பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இருமல் : ரோஸ்மெரி மார்புச்சளியை கரைக்கும். தொண்டையில் உண்டாகும் கரகரப்பு மற்றும் நமைச்சலை கட்டுப்படுத்தும். அதிலுள்ள ஆற்றல் கிருமித் தொற்றை அழிக்கும். அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. ரோஸ்மெரி எண்ணெயையும் நுகர்வதால் பலன் தரும். குடல் தொற்று : குடலில் குறிப்பாக குழந்தைகள் கண்டதையும் வாயில் வைப்பதால் எளிதாக குடலில் பேக்டீரியாக்கள் தொற்றிக் கொள்ளும். இதனை தவிர்க்க சபக்கி கீரையை வாங்கி உணவில் சமைக்கலாம். இதில் லைமோனைன் என்ற பொருள் உள்ளது. இது கிருமிகளை அழிக்கும் பண்பை பெற்றுள்ளது. மாதவிடாய் வலி: மாதவிடாயின்போது உண்டாகும் உடல் வலி, இடுப்பு வலி, சதைப்பிடிப்பிற்கு ஓமம் அருமருந்தாகும். ஓமத்தை 1 ஸ்பூன் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வலி குணமாகும். புத்துணர்வையும் தரும். கடின தாதுக்கள் : நமது உடலிலிருந்து வெளியேறாத தாதுக்கள் சேர்த்து கல் போன்று சிறு நீரகத்தில் உண்டாகிவிடும். அதோடு அவை மன அழுத்ததையும் தரும். இதனை தவிர்க்க, கொத்துமல்லியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கார்பாக்ஸிலிக் அமிலம் கடின தாத்துக்களையும் நச்சுக்களையும் வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது. சிவப்பு மிளகாய் : சைனஸ் பிரச்சனை நிறைய பேருக்கு பாதிப்பை தரும். காயாத சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். வயிற்று வலி : வயிற்று வலி உப்புசம், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் அவற்றை குணப்படுத்த புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா சாறு அல்லதுதுவையல் என எடுத்துக் கொண்டால் வயிற்றுவலி குணமாகும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?


தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து தினமும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலை நன்மைகள்: * கறிவேப்பிலையில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடி உதிர்ந்து மெலிவதைத் தடுக்கும். * கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். *, கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவித்து, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.   வெந்தயத்தின் நன்மைகள்: * வெந்தயத்தில் உள்ள வைட்டமின் பி, நரைமுடியைத் தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும். * வெந்தயம் தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் மற்றும் வெந்தயத்தில் உள்ள லிசித்தின், தலைமுடிக்கு பொலிவைத் தரும்.  

தேவையான பொருட்கள்: வெந்தயம் - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 கப் ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - 10-20 தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறியதும், அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து பயன்படுத்த வேண்டும். எண்ணெயின் நன்மைகள்: * இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்ய உதவும். * ஸ்கால்ப்பை வறட்சியின்றி பார்த்துக் கொள்ளும். * தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். * தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். * முடி வெடிப்பைத் தடுக்கும் * நரைமுடியைத் தடுக்கும். * பொடுகைப் போக்கும். * ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யும்.